எழுத்தாளர் தாமரைக்கண்ணன் |
அறிமுகம்
தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம், 02- 07-1934 - 19-01-2011) 20-ஆம் நூற்றாண்டின் ஒரு குறிப்பிடத்தக்கதமிழக எழுத்தாளர். தமிழகஅரசின் சிறந்தநூல்களுக்கானபரிசினை இரண்டு முறை பெற்றுள்ளார். எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவருக்கு நியூயார்க்கில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் 17.05.1985-ல் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக 'டாக்டர்' பட்டம் வழங்கியது.
இணைய தள முகவரி : http://www.thamaraikannan.com/
விக்கிப்பீடியா கட்டுரை: http://ta.wikipedia.org/wiki/தாமரைக்கண்ணன்
பொருளடக்கம்
- வாழ்க்கைக்குறிப்பு
- படைப்புகள் புதினங்கள்
- இதழ்களில் வெளிவந்தவை (கால முறைப்படி) கல்வெட்டு ஆய்வுக்கட்டுரைகள்
- வானொலியில் ஒலிபரப்பப் பெற்றநாடகங்கள்
- கல்வெட்டுப்பணிகள்
- தொல்பொருள் ஆய்வுத்துறையில் புதியகண்டுபிடிப்புகள்
- கல்விப் பணிகள்
- பரிசுகளும், பட்டங்களும்
- இவரைப்பற்றி தமிழ் அறிஞர்கள்
சிறுகதைத்தொகுதிகள்
நாடகங்கள்
வரலாற்றுநூல்கள்
ஆய்வுநூல்கள்
சிறுகதைகள்
நாடகங்கள்
தாமரைக்கண்ணன், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆட்சிப்பாக்கம் என்னும் சிறிய கிராமத்தில் 01.07.1934-ல் பிறந்தவர். பெற்றோர் மா.வீராசாமி - வீ.பாஞ்சாலி அம்மாள்.
பள்ளி பருவத்திலேயே சுதேசமித்திரன், தமிழ்மணி, குமுதம், போர்வாள், காஞ்சி முதலான இதழ்களைத் தொடர்ந்து படித்தமையால் இவருக்கு எழுத்தார்வம் கிளைவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மாவட்டக் கழகக் கலப்புப் பள்ளியில் (06.09.1954) ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பணியில் இருக்கும் போதே எழுத்துத் துறையில் காலூன்றத் தொடங்கினார்.
முதன்முதலாக 22.01.1957-ல் சௌபாக்கியவதி அரசு இதழில் 'மங்கையர்க்கரசி'கட்டுரையும், தமிழன் புரட்சி இதழில் 'செவ்வாய்க்கிழமை' சிறுகதையும் அடுத்தடுத்து வெளிவந்தன. எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறிபாக்கத்தார், அகரத்தான், தாமரை என பல்வேறு புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.
அவரது இலக்கிய வாழ்க்கை;நாடகம், புதினம், சிறுகதை, புத்தக மதிப்புரை, கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் தொல்லியல் துறையிலும் சுமார் அய்ம்பது ஆண்டுகளாக தொடர்ந்தது.
19.01.2011-ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக மறைந்தார்.
படைப்புகள்
புதினங்கள்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | ஆகஸ்டு1962 | தங்கத்தாமரை | வள்ளுவர் பண்ணை | |
2 | நவம்பர்1970 | மூன்றாவதுதுருவம் | ஸ்டார் பிரசுரம் | |
3 | மார்ச்1979 | நெஞ்சின் ஆழம் | மருதமலையான் | |
4 | அக்டோபர்1983 | பன்னீர்சிந்தும்பனிமலர் | நறுமலர்ப் பதிப்பகம் | |
5 | டிசம்பர்1987 | நெஞ்சத்தில் நீ | பராசக்திபதிப்பகம் | |
6 | டிசம்பர்1982 | அவள்காத்திருக்கிறாள் | பூவழகிப் பதிப்பகம் | கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது |
சிறுகதைத்தொகுதிகள்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | நவம்பர்1964 | மனக்காற்றாடி | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
2 | ஜூன் 1972 | கொன்றைப்பூ | பாப்பா பதிப்பகம் | 'அத்திப்பூ' என்னும் நாடகம் 11- ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது(1978) |
3 | ஆகஸ்டு1979 | அறுசுவை | சேகர் பதிப்பகம் | |
4 | ஆகஸ்டு1978 | ஏழுநாள் | சேகர் பதிப்பகம் | |
5 | டிசம்பர்1984 | எல்லாம்இன்பமயம் | பராசக்திபதிப்பகம் | |
6 | டிசம்பர் 1984 | உயர்ந்தஉள்ளம் | பராசக்தி பதிப்பகம் | |
7 | டிசம்பர்1985 | கனவுக்கண்கள் | பராசக்திபதிப்பகம் | |
8 | டிசம்பர்1985 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் | பராசக்தி பதிப்பகம் |
நாடகங்கள்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | ஆகஸ்டு1982 | சங்கமித்திரை | விசாலாட்சி பதிப்பகம் | தமிழகஅரசின்பரிசுபெற்றது(1984) |
2 | 1960 | கிள்ளிவளவன் | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | ‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது |
3 | ஜனவரி 1963 | வெண்ணிலா | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
4 | ஏப்ரல் 1963 | அலெக்ஸாண்டர் | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
5 | பிப்ரவரி 1963 | மருதுபாண்டியர் | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
6 | டிசம்பர் 1992 | சாணக்கியன் | திருமேனி நிலையம் | |
7 | நவம்பர்1979 | கைவிளக்கு | இலக்குமி நிலையம் | |
8 | டிசம்பர் 1984 | பேசும்ஊமைகள் | மணியம் பதிப்பகம் | |
9 | டிசம்பர்1984 | நல்லநாள் | பராசக்தி பதிப்பகம் | |
10 | டிசம்பர்1985 | நல்லூர் முல்லை | பராசக்தி பதிப்பகம் | கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது |
11 | டிசம்பர்1985 | வளையாபதி | பராசக்தி பதிப்பகம் | |
12 | நவம்பர்1991 | இரகசியம் | பராசக்தி பதிப்பகம் | |
13 | ஏப்ரல் 1989 | பள்ளிக்கூடம் | திருமேனி நிலையம் |
வரலாற்றுநூல்கள்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | ஜூலை1963 | கருணைக்கடல் | சுகுணா பப்ளிஷர்ஸ் | |
2 | ஜனவரி 1964 | திருநாவுக்கரசர் | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
3 | டிசம்பர் 1984 | ஒருமனிதன்தெய்வமாகிறான் | பராசக்தி பதிப்பகம் | |
4 | 19.01.1987 | கருமாரிப்பட்டிசுவாமி | ராதா ஆப்செட் பிரஸ் | |
5 | 30.09.1989 | சம்புவரையர் | பராசக்தி பதிப்பகம் |
ஆய்வுநூல்கள்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | டிசம்பர் 1984 | வரலாற்றுக்கருவூலம் | சேகர் பதிப்பகம் | தமிழகஅரசின்பரிசுபெற்றது (1985) |
2 | ஏப்ரல் 2006 | வரலாறுகூறும்திருத்தலங்கள் | மூவேந்தர் பதிப்பகம் | |
3 | ஏப்ரல் 1975 | ஆட்சீசுவரர்திருக்கோயில் | கோயில் விழாக்குழு |
அறிவியல்நூல்
வ.எண் | வெளியானஆண்டு | நூலின்பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | மார்ச் 1992 | வியப்பூட்டும் விண்வெளி் | திருமேனி நிலையம் |
இதழ்களில்வெளிவந்தவை(கால முறைப்படி)
கல்வெட்டுஆய்வுக் கட்டுரைகள்
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
1. ஒரு கல்வெட்டு வழி காட்டுகிறது
அமுதசுரபி 2. திருவக்கரை சந்திரசேகரர் (ஜூலை 1978)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
3. திருமோகூர் வழித்துணைப் பெருமாள்(பிப்ரவரி 1980)
4. மும்மூர்த்திகளுக்கு ஒரு திருக்கோயில்(தீபாவளி மலர் 1980)
5. தாதாபுரத்தில் குந்தவை பிராட்டியார் (செப்டம்பர் 1981) – ஆய்வுக் கட்டுரை- தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
6. நெடுங்குன்றம் இராமபிரான் (ஆகஸ்டு 1982)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
7. தேவிகாபுரம் பெரிய நாச்சியார்(தீபாவளி மலர் 1982)
8. திருச்செங்கோடு செங்கோட்டு வேலர்(தீபாவளி மலர் 1983)
9. சேந்தமங்கலம் வாணிலை கண்டீசுரர் (தீபாவளி மலர் 1984)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
10. விழுப்புரம் வாலீச்வரர் கோயில் (எப்ரல் 1986)
11. செய்யாறு வேதபுரீசுவரர் (வசந்த மலர் 1987)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
12. காஞ்சியைக் கவர்ந்த கலவை (தீபாவளி மலர்1987)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
13. புத்திரன்கோட்டையின் புதிய கல்வெட்டுகள் (தீபாவளி மலர்1988)
14. வெடால் வடவாயில் ஆண்டவர் (தீபாவளி மலர் 1989)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
15. செய்யூர் புற்றிடம் கொண்டார்(ஜூலை 1990)
16. மதுராந்தகம் திருவெண்காடுடையார் (தீபாவளி மலர்1990)
17. தக்கோலம் திருவூறல் உடையார் (தீபாவளி மலர் 1991)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
18. திருபுவனம் திரிபுவன வீரேச்சுரம் (ஜூன் 1992)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
19. திருவலஞ்சுழி கற்பகநாதர் (தீபாவளி மலர் 1992)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
20. பட்டீச்சரம் பட்டீசுவரர் (ஜூலை 1993)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
21. தாராசுரம் ஐராவதேசுவரர் (அக்டோபர் 1993)
22. வைத்தீசுவரன் கோயில் வைத்தியநாதர்(தீபாவளி மலர் 1993)
23. மாபெரும்சக்திமருவத்தூர்அடிகளார்(தீபாவளி மலர் 1994)
24. திருப்போரூர் செல்வோம் திருமுருகன் அருள் பெறுவோம்(ஏப்ரல் 1995)
25. திருக்கச்சூர் திருஆலக்கோயில் அம்மான்(தீபாவளி மலர் 1995)
26. சோழர்கள் கட்டிய ஒலக்கூர் கோயில்(தீபாவளி மலர் 1996)
27. எசாலம் இராமநாத ஈசுவரர்(மே 1997)
28. திருவதிகை வீரட்டானர்(தீபாவளி மலர் 1997)
29. திருப்பணிகளில் நரலோக வீரன்(தீபாவளி மலர் 1998)
30. பராந்தகன் காலத்துக்கோயிலின் பரிதாப நிலை(ஜனவரி 2000)
31. சோழப்பேரரசு கட்டிய திருநாவலூர்க் கோயில் (ஜூன் 2001)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
32. இந்திரன் சாபம் நீக்கிய வீரவர்ம ஈசுவரர் (நவம்பர் 2001)
தினமணிசுடர்3. திருமோகூர் வழித்துணைப் பெருமாள்(பிப்ரவரி 1980)
4. மும்மூர்த்திகளுக்கு ஒரு திருக்கோயில்(தீபாவளி மலர் 1980)
5. தாதாபுரத்தில் குந்தவை பிராட்டியார் (செப்டம்பர் 1981) – ஆய்வுக் கட்டுரை- தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
6. நெடுங்குன்றம் இராமபிரான் (ஆகஸ்டு 1982)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
7. தேவிகாபுரம் பெரிய நாச்சியார்(தீபாவளி மலர் 1982)
8. திருச்செங்கோடு செங்கோட்டு வேலர்(தீபாவளி மலர் 1983)
9. சேந்தமங்கலம் வாணிலை கண்டீசுரர் (தீபாவளி மலர் 1984)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
10. விழுப்புரம் வாலீச்வரர் கோயில் (எப்ரல் 1986)
11. செய்யாறு வேதபுரீசுவரர் (வசந்த மலர் 1987)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
12. காஞ்சியைக் கவர்ந்த கலவை (தீபாவளி மலர்1987)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
13. புத்திரன்கோட்டையின் புதிய கல்வெட்டுகள் (தீபாவளி மலர்1988)
14. வெடால் வடவாயில் ஆண்டவர் (தீபாவளி மலர் 1989)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
15. செய்யூர் புற்றிடம் கொண்டார்(ஜூலை 1990)
16. மதுராந்தகம் திருவெண்காடுடையார் (தீபாவளி மலர்1990)
17. தக்கோலம் திருவூறல் உடையார் (தீபாவளி மலர் 1991)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
18. திருபுவனம் திரிபுவன வீரேச்சுரம் (ஜூன் 1992)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
19. திருவலஞ்சுழி கற்பகநாதர் (தீபாவளி மலர் 1992)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
20. பட்டீச்சரம் பட்டீசுவரர் (ஜூலை 1993)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
21. தாராசுரம் ஐராவதேசுவரர் (அக்டோபர் 1993)
22. வைத்தீசுவரன் கோயில் வைத்தியநாதர்(தீபாவளி மலர் 1993)
23. மாபெரும்சக்திமருவத்தூர்அடிகளார்(தீபாவளி மலர் 1994)
24. திருப்போரூர் செல்வோம் திருமுருகன் அருள் பெறுவோம்(ஏப்ரல் 1995)
25. திருக்கச்சூர் திருஆலக்கோயில் அம்மான்(தீபாவளி மலர் 1995)
26. சோழர்கள் கட்டிய ஒலக்கூர் கோயில்(தீபாவளி மலர் 1996)
27. எசாலம் இராமநாத ஈசுவரர்(மே 1997)
28. திருவதிகை வீரட்டானர்(தீபாவளி மலர் 1997)
29. திருப்பணிகளில் நரலோக வீரன்(தீபாவளி மலர் 1998)
30. பராந்தகன் காலத்துக்கோயிலின் பரிதாப நிலை(ஜனவரி 2000)
31. சோழப்பேரரசு கட்டிய திருநாவலூர்க் கோயில் (ஜூன் 2001)தொகுப்பு'வரலாறு கூறும் திருத்தலங்கள்'
32. இந்திரன் சாபம் நீக்கிய வீரவர்ம ஈசுவரர் (நவம்பர் 2001)
33. அச்சிறுபாக்கம் ஆட்சிக்கொண்டநாதர்(27.03.1977)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
34. இந்தளூர் மணம்புரீசுவரர்(24.04.1977)
35. தெள்ளாறு திருமூலட்டான நாதர்(18.09.1977)
36. தில்லையின் எல்லை தெய்வம்(23.04.1978)
37. முன்னூர் ஆடவல்லநாயனார்(18.06.1978)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
38. திருமுக்காடு முக்காட்டீசுவரர்(10.12.1978)
39. வேங்கடாம்பேட்டை வேணுகோபாலர்(22.04.1979)
40. அரசர் கோயில் அற்புதத் தாயார்(17.02.1980)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
41. மொழி போதனையில் புதிய திருப்பம்(30.03.1980)
42. சிங்கபுரம் ஸ்ரீஅரங்கநாதர்(22.02.1981)
43. பெரும்பேறு தான்தோன்றி ஈசுவரர்(26.04.1981)
44. மடம் குளந்தை ஆண்டார்(18.10.1981)
45. பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த சாரம்(08.08.1982)
46. கொடூர் அகத்தீசுவரமுடையார்(13.03.1983)
47. திருப்பணிகளுக்கு வழிகாட்டும் திருமால்பாடி(தமிழ்புத்தாண்டு மலர் 14.04.1987)
தினமலர்34. இந்தளூர் மணம்புரீசுவரர்(24.04.1977)
35. தெள்ளாறு திருமூலட்டான நாதர்(18.09.1977)
36. தில்லையின் எல்லை தெய்வம்(23.04.1978)
37. முன்னூர் ஆடவல்லநாயனார்(18.06.1978)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
38. திருமுக்காடு முக்காட்டீசுவரர்(10.12.1978)
39. வேங்கடாம்பேட்டை வேணுகோபாலர்(22.04.1979)
40. அரசர் கோயில் அற்புதத் தாயார்(17.02.1980)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
41. மொழி போதனையில் புதிய திருப்பம்(30.03.1980)
42. சிங்கபுரம் ஸ்ரீஅரங்கநாதர்(22.02.1981)
43. பெரும்பேறு தான்தோன்றி ஈசுவரர்(26.04.1981)
44. மடம் குளந்தை ஆண்டார்(18.10.1981)
45. பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த சாரம்(08.08.1982)
46. கொடூர் அகத்தீசுவரமுடையார்(13.03.1983)
47. திருப்பணிகளுக்கு வழிகாட்டும் திருமால்பாடி(தமிழ்புத்தாண்டு மலர் 14.04.1987)
48. தவக்கோலம் காணும் சமணப் பெண்கள் சமத்துவம் வளரவித்திட்டனர் இங்கே (19.06.1981)
49. சீயமங்கலம் தூணாண்டார் (14.01.1983) தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
50. திருஞானசம்பந்தர் பாடிய திருவடிசூலம்(09.03.1983)
51. திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர்(14.08.1984)
52. இரண்டு அரிய செய்திகளை கூறும் விழுப்புரம் கல்வெட்டுகள்(22.10.1984)
53. முதலாம் பராந்தகன் கட்டிய திருமால் கோயில்(12.12.1985)
54. திருமால்பாடி பள்ளி கொண்ட பெருமாள்(16.01.1986)
55. 900 ஆண்டுகளுக்கு முந்தைய கீழ்சேவூர் அகத்தீவரஸ்முடையார் கோயில் (09.01.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
56. சிவபெருமான் செய்த எட்டு வீரச்செயல் (தீபாவளி மலர்1997)
57. பேசும் பெருமாள் (தீபாவளி மலர்1998)
58. கரையேற்றும் கரையீசுவரர்(27.02.2010)
தமிழரசி49. சீயமங்கலம் தூணாண்டார் (14.01.1983) தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
50. திருஞானசம்பந்தர் பாடிய திருவடிசூலம்(09.03.1983)
51. திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர்(14.08.1984)
52. இரண்டு அரிய செய்திகளை கூறும் விழுப்புரம் கல்வெட்டுகள்(22.10.1984)
53. முதலாம் பராந்தகன் கட்டிய திருமால் கோயில்(12.12.1985)
54. திருமால்பாடி பள்ளி கொண்ட பெருமாள்(16.01.1986)
55. 900 ஆண்டுகளுக்கு முந்தைய கீழ்சேவூர் அகத்தீவரஸ்முடையார் கோயில் (09.01.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
56. சிவபெருமான் செய்த எட்டு வீரச்செயல் (தீபாவளி மலர்1997)
57. பேசும் பெருமாள் (தீபாவளி மலர்1998)
58. கரையேற்றும் கரையீசுவரர்(27.02.2010)
59. பச்சையப்பர் கொடுத்த ஒரு லட்சம் வராகன் எங்கே?(12.04.1992)
60. ஆயிர வைசியர் கட்டிய சென்னை கந்தசாமி கோயில் (03.05.1992)
61. சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொடையாக அளிக்க பெற்ற இரத்தின கெண்டி எங்கே?(24.05.1992)
62. தண்டையார்ப்பேட்டை முத்துக்கிருக்ஷ்ண பிரமம் மடம்,இப்போது எங்கே இருக்கிறது?(21.06.1992)
63. திருவல்லிக்கேணி திருவுடையான்(06.09.1992)
64. தர்காஸ் விண்ணேற்பு மாதா கோயில்(13.09.1992)
65. மாங்காடு காமாட்சி அம்மன்(20.09.1992)
66. குன்றத்தூர் வட திருநாகேசுவரர்(27.09.1992)
67. திருப்போரூர் கந்தசுவாமிக் கோயில்( 04.10.1992)
68. திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள்(11.10.1992)
69. திருவான்மியூர் மருந்தீஸ்வரர்(25.10.1992)
70. திரிசூலம் திரிசூலநாதர்(01.11.1992)
71. திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர்(08.11.1992)
72. திருவடிசூலம் இடைச்சுரநாதர்(15.11.1992)
73. திருவிடவெந்தை ஆழ்வார் ஸ்ரீ வராகதேவர்(22.11.1992)
74. சோமங்கலம் சோமநாதர்(29.11.1992)
75. மானாமதிதிருக்கரபுரதேவர்(19.12.1992)
76. மாங்காடு வெள்ளீசுவரர்(26.12.1992)
77. வயிரபுரம் சோமசுந்தரர்(09.01.1993)
78. பாலூர் பதங்கீஸ்வரர்(16.01.1993)
79. திருமாகறல் திருமாகறலீசுரர் (23.01.1993)
80. நெய்யாடுபாக்கம் மருந்தீசுரர்(30.01.1993)
81. பழைய சீவரம் இலட்சுமி நரசிம்மர் (06.02.1993)
82. ஆத்தூர் முத்தீசுவரர்(13.02.1993)
83. அரசர் கோயில் வரதராசப் பெருமாள்(27.02.1993)
84. கிடங்கில் அன்பநாயக ஈசுவரர்(06.03.1993)
85. திருவானக்கோயில் திருவாலீசுவரர்(13.03.1993)
86. திண்டிவனம் திண்டீசுவரர்(20.03.1993)
87. ஆனூர் திருவம்பங்காடுடையார் (27.03.1993)
88. பழையனூர் மாகாளீசுவரர் (03.04.1993)
89. பொன்விளைந்த களத்தூர் முன்குடுமி ஈசுவரர் (17.04.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
90. மதுராந்தகம் கோதண்டராமர் (15.05.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
91. பள்ளிகொண்டா பள்ளிகொண்ட பெருமாள் (22.05.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
92. விரிஞ்சிபுரம் வழித்துணை நாயனார் (05.06.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
93. மானாம்பதி வானவன் மாதேவி உடையார்(03.07.1993)
94. வெட்டுவாணம் எல்லையம்மன் (01.08.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
95. திருப்புலிவனம் திருப்புலிவலமுடையார்(19.12.1993)
96. மரக்காணம் பூமீசுவரர்(20.02.1994)
97.(வாரம் ஒரு குறள்) திருவள்ளுவரின் தலைமகள் (27.02.1994)
98. பெரணமல்லூர் எட்டியம்மன்(28.02.1999)
99. சளுக்கை சாகர நாராயணப் பெருமாள்(14.03.1999)
100.ஆவணியாபுரம் இலட்சுமி நரசிம்மர்(21.03.1999)
101.பெரணமல்லூர் ஆதீசுவரர்ஜீநாலயம்(28.03.1999)
பெருங்கருணை60. ஆயிர வைசியர் கட்டிய சென்னை கந்தசாமி கோயில் (03.05.1992)
61. சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொடையாக அளிக்க பெற்ற இரத்தின கெண்டி எங்கே?(24.05.1992)
62. தண்டையார்ப்பேட்டை முத்துக்கிருக்ஷ்ண பிரமம் மடம்,இப்போது எங்கே இருக்கிறது?(21.06.1992)
63. திருவல்லிக்கேணி திருவுடையான்(06.09.1992)
64. தர்காஸ் விண்ணேற்பு மாதா கோயில்(13.09.1992)
65. மாங்காடு காமாட்சி அம்மன்(20.09.1992)
66. குன்றத்தூர் வட திருநாகேசுவரர்(27.09.1992)
67. திருப்போரூர் கந்தசுவாமிக் கோயில்( 04.10.1992)
68. திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள்(11.10.1992)
69. திருவான்மியூர் மருந்தீஸ்வரர்(25.10.1992)
70. திரிசூலம் திரிசூலநாதர்(01.11.1992)
71. திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர்(08.11.1992)
72. திருவடிசூலம் இடைச்சுரநாதர்(15.11.1992)
73. திருவிடவெந்தை ஆழ்வார் ஸ்ரீ வராகதேவர்(22.11.1992)
74. சோமங்கலம் சோமநாதர்(29.11.1992)
75. மானாமதிதிருக்கரபுரதேவர்(19.12.1992)
76. மாங்காடு வெள்ளீசுவரர்(26.12.1992)
77. வயிரபுரம் சோமசுந்தரர்(09.01.1993)
78. பாலூர் பதங்கீஸ்வரர்(16.01.1993)
79. திருமாகறல் திருமாகறலீசுரர் (23.01.1993)
80. நெய்யாடுபாக்கம் மருந்தீசுரர்(30.01.1993)
81. பழைய சீவரம் இலட்சுமி நரசிம்மர் (06.02.1993)
82. ஆத்தூர் முத்தீசுவரர்(13.02.1993)
83. அரசர் கோயில் வரதராசப் பெருமாள்(27.02.1993)
84. கிடங்கில் அன்பநாயக ஈசுவரர்(06.03.1993)
85. திருவானக்கோயில் திருவாலீசுவரர்(13.03.1993)
86. திண்டிவனம் திண்டீசுவரர்(20.03.1993)
87. ஆனூர் திருவம்பங்காடுடையார் (27.03.1993)
88. பழையனூர் மாகாளீசுவரர் (03.04.1993)
89. பொன்விளைந்த களத்தூர் முன்குடுமி ஈசுவரர் (17.04.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
90. மதுராந்தகம் கோதண்டராமர் (15.05.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
91. பள்ளிகொண்டா பள்ளிகொண்ட பெருமாள் (22.05.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
92. விரிஞ்சிபுரம் வழித்துணை நாயனார் (05.06.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
93. மானாம்பதி வானவன் மாதேவி உடையார்(03.07.1993)
94. வெட்டுவாணம் எல்லையம்மன் (01.08.1993)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
95. திருப்புலிவனம் திருப்புலிவலமுடையார்(19.12.1993)
96. மரக்காணம் பூமீசுவரர்(20.02.1994)
97.(வாரம் ஒரு குறள்) திருவள்ளுவரின் தலைமகள் (27.02.1994)
98. பெரணமல்லூர் எட்டியம்மன்(28.02.1999)
99. சளுக்கை சாகர நாராயணப் பெருமாள்(14.03.1999)
100.ஆவணியாபுரம் இலட்சுமி நரசிம்மர்(21.03.1999)
101.பெரணமல்லூர் ஆதீசுவரர்ஜீநாலயம்(28.03.1999)
102.புலிப்பரக்கோயில் புலிப்பகவநாயனார் (ஏப்ரல் 1986)
103.அருள்ஞானிசுவாமிஅபேதானந்தர்வாழ்க்கைவரலாற்றுக்குறிப்புகள்(1986)
104.கருமாரப்பட்டிசுவாமிகள் (ஜூன் – ஜூலை1986)
105.திருவெள்ளறை செந்தாமரைக்கண்ணர் (ஆகஸ்டு1986)
106.வையகம் போற்றும் வைகுந்தப் பெருமாள் கோயில் (பிப்ரவரி 1987)
107.விடால் கறைகண்டீசுரர்(ஏப்ரல்1987)
108.குவலயம்போற்றும்குருஜி(ஜூன் – ஆகஸ்டு1988)
இதயதீபம்103.அருள்ஞானிசுவாமிஅபேதானந்தர்வாழ்க்கைவரலாற்றுக்குறிப்புகள்(1986)
104.கருமாரப்பட்டிசுவாமிகள் (ஜூன் – ஜூலை1986)
105.திருவெள்ளறை செந்தாமரைக்கண்ணர் (ஆகஸ்டு1986)
106.வையகம் போற்றும் வைகுந்தப் பெருமாள் கோயில் (பிப்ரவரி 1987)
107.விடால் கறைகண்டீசுரர்(ஏப்ரல்1987)
108.குவலயம்போற்றும்குருஜி(ஜூன் – ஆகஸ்டு1988)
109.வெயிலில்காயும்திருமால்வெண்மாலகரம்(ஜூன் 2000)
110.திருமுக்கூடல்மகாவிஷ்ணு(ஜூலை 2000)
111.சளுக்கைஆதிநாதர்(ஆகஸ்டு 2000)
112.செங்குறிச்சிஸ்ரீலஷ்மிநாராயணர்(அக்டோபர் 2000)
113.அந்தகக்கவிவீரராகவர்பாடியஏரிப்பாக்கம்அற்புதவிநாயகர்(டிசம்பர் 2000)
ஞானமணி்110.திருமுக்கூடல்மகாவிஷ்ணு(ஜூலை 2000)
111.சளுக்கைஆதிநாதர்(ஆகஸ்டு 2000)
112.செங்குறிச்சிஸ்ரீலஷ்மிநாராயணர்(அக்டோபர் 2000)
113.அந்தகக்கவிவீரராகவர்பாடியஏரிப்பாக்கம்அற்புதவிநாயகர்(டிசம்பர் 2000)
114.பனையபுரம் திருப்பனங்காடுடையார்(மார்ச் 2000)
115.கடைமலைப்புத்தூர்மாயமுத்துஅவதூததத்தர்திருக்கோயில்(மே 2000)
116.சந்திரநாதர்சமணர்ஆலயம்(நவம்பர் 2000)
117.இராமரும்சீதையும்வழிபட்டஆத்தீசுவரர்(தீபாவளி மலர் 2003)
தரிசனம்115.கடைமலைப்புத்தூர்மாயமுத்துஅவதூததத்தர்திருக்கோயில்(மே 2000)
116.சந்திரநாதர்சமணர்ஆலயம்(நவம்பர் 2000)
117.இராமரும்சீதையும்வழிபட்டஆத்தீசுவரர்(தீபாவளி மலர் 2003)
118.சண்டீஸ்வரரும்நந்தீஸ்வரரும்(செப்டம்பர் 1998)
119.உக்கல்பெருந்திருக்கோயில்பெருமான்(ஜூலை 1999)
மஞ்சரி்119.உக்கல்பெருந்திருக்கோயில்பெருமான்(ஜூலை 1999)
120.உய்யக்கொண்டான் திருமலை விழுமியநாதர்(அக்டோபர் 1978)தொகுப்பு‘வரலாறு கூறும் திருத்தலங்கள்’
121.பெருமுக்கல்புற்றிடங்கொண்டார்(ஜனவரி 1981)
அருள்ஜோதி121.பெருமுக்கல்புற்றிடங்கொண்டார்(ஜனவரி 1981)
122.சளுக்கைமனுகுலமாதேவஈசுவரர்கோயில்(ஜூன் 1999)
123.மருதாடு புரந்தர ஈசுரர்(டிசம்பர் 1999)
கலைமகள்123.மருதாடு புரந்தர ஈசுரர்(டிசம்பர் 1999)
124.காடுவெட்டி கணபதீச்வரர்(பிப்ரவரி 1990)
சக்தி் 125.சுந்தரவரதராஜப்பெருமாள்கோயில் உத்திரமேரூர்(தீபாவளி மலர் 1995)
ஆன்மீகம் 126.அந்தமான்தீவில்அதிசயக்கோயில்கள்(ஏப்ரல் 1997)
தினமணிகதிர் 127.கல்வெட்டுகளில்காணப்படும்சுவையான வழக்குகளும் தீர்ப்புகளும்(ஜனவரி 1984)
தினமணி 128.ஒரத்தி கல்வெட்டுகள் (தமிழ் புத்தாண்டு மலர்14.04.1986)
தினமணி 129.ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பஞ்சாயத்து தேர்தல் முறை (1995)
சிறுகதைகள்வ.எண் | தலைப்பு | இதழ் | ஆண்டு | தொகுப்பின்பெயர் |
---|---|---|---|---|
1 | மங்கையர்க்கரசிக்கு(இராசமாணிக்கம்) | சௌபாக்கியம் | பொங்கல் இதழ் 22.01.1957 | |
2 | ஆழி | ஆரம்பக்கல்வி் | ஜூலை 1960 | மனக்காற்றாடி |
3 | புரளி | ஆரம்பக்கல்வி | பிப்ரவரி 1961 | மனக்காற்றாடி |
4 | வெண்கொற்றக்குடை | ஆரம்பக்கல்வி் | ஜூன் 1961 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
5 | வடிவு | ஆரம்பக்கல்வி | ஏப்ரல் 1962 | |
6 | துணை | ஆரம்பக்கல்வி் | ஜூன் 1962 | மனக்காற்றாடி |
7 | அத்திப்பூ | ஆரம்பக்கல்வி | ஜூலை 1962 | கொன்றைப்பூ |
8 | செவ்வாய்க்கிழமை | ஆரம்பக்கல்வி் | செப்டம்பர் 1962 | |
9 | நெஞ்சின்ஆழம் | ஆரம்பக்கல்வி | அக்டோபர் 1962 | மனக்காற்றாடி |
10 | மனக்காற்றாடி | ஆரம்பக்கல்வி் | பிப்ரவரி 1963 | மனக்காற்றாடி |
11 | கிழிந்ததாவணி | ஆரம்பக்கல்வி | பிப்ரவரி 1969 | உயர்ந்த உள்ளம் |
12 | இருந்தாலும் அந்தபவானிடீச்சர் | ஆரம்பக்கல்வி் | ஏப்ரல் 1970 | உயர்ந்த உள்ளம் |
13 | ஈஸ்வரசந்திரவித்யாசாகர்(கட்டுரை) | ஆரம்பக்கல்வி | ஜனவரி 1971 | |
14 | தாழம்பூ | ஆரம்பக்கல்வி் | ஜூன் 1971 | கொன்றைப்பூ |
15 | அப்பா நீ திருந்தி விடு | ஆரம்பக்கல்வி | ஜூலை 1978 | |
16 | மகிழம்பூ | அமுதசுரபி | ஜூலை 1962 | கொன்றைப்பூ |
17 | தாமரைப்பூ | அமுதசுரபி | ஆகஸ்டு 1963 | கொன்றைப்பூ |
18 | தும்பைப்பூ | அமுதசுரபி | மார்ச் 1964 | கொன்றைப்பூ |
19 | அனிச்சம்பூ | அமுதசுரபி | மே 1965 | கொன்றைப்பூ |
20 | மல்லிகைப்பூ | அமுதசுரபி் | மே 1966 | கொன்றைப்பூ |
21 | ஒரு வெள்ளிக்கிழமை இரவு | அமுதசுரபி | ஏப்ரல் 1968 | |
22 | பூஜைக்கு ஒரு தெய்வம் | அமுதசுரபி | டிசம்பர் 1968 | |
23 | ஒரு கதாநாயகன் கதை | அமுதசுரபி | ஜனவரி 1972 | |
24 | கற்பு சுடும் | அமுதசுரபி | தீபாவளி மலர் 1978 | எல்லாம் இன்ப மயம் |
25 | திருட்டுக்கதை | மாலைமுரசு | 12.02.1966 | மூன்றாவது துருவம் |
26 | சனிக்கிழமை | மாலைமுரசு | 11.06.1966 | |
27 | கட்டில் | மாலைமுரசு | 29.10.1966 | |
28 | இது கதை அல்ல கண்ணீர் | மாலைமுரசு் | 22.11.1969 | |
29 | கொன்றைப்பூ | மாலைமுரசு | 23.05.1970 | கொன்றைப்பூ |
30 | ஒரு ரோஜாமாலைக்குப்பின்னால் | மாலைமுரசு | 20.12.1970 | |
31 | தொட்டாற்சிணுங்கி | மாலைமுரசு | 07.08.1971 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
32 | அவள் பேசவில்லை | மாலைமுரசு் | 26.02.1972 | கனவுக்கண்கள் |
33 | இதயக்கதவு(தொடர்) | மாலைமுரசு | 26.04.1974 | |
34 | கவரிங் | மாலைமுரசு | 27.09.1975 | எல்லாம் இன்ப மயம் |
35 | தூண்டுதல் | மாலைமுரசு | 31.07.1976 | கனவுக்கண்கள் |
36 | பன்னீர் சிந்தும் பனிமலர் (தொடர்) | மாலைமுரசு் | 22.12.1978 - 04.05.1979 | பன்னீர் சிந்தும் பனிமலர் |
37 | இதயத்தை இழந்தவள் | ராணி | 01.02.1970 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
38 | மாதவனின் மாமியார் | ராணி | 23.09.1973 | |
39 | சொல்லித் தெரிவதில்லை | ராணி | 24.02.1974 | |
40 | அந்தப் பழக்கம் | ராணி் | 15.09.1974 | |
41 | வெளியில் சொன்னால் | ராணி | 14.03.1976 | எல்லாம் இன்ப மயம் |
42 | மாறியது நெஞ்சம் | ராணி் | 27.06.1976 | |
43 | பெண் குலத்தின் பொன்விளக்கு | ராணி | 29.01.1978 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
44 | இன்பமழை | குயில் | ஆண்டு மலர் 1969 | |
45 | கசப்பு | குயில் | ஆண்டு மலர் 1970 | அறுசுவை |
46 | புளிப்பு | குயில் | ஆண்டு மலர் 1971 | அறுசுவை |
47 | வியாழக்கிழமை | குயில் | ஆண்டு மலர் 1972 | 7 நாள் |
48 | கனவோ!கனவு | குயில் | ஆண்டு மலர் 1973 | |
49 | பொல்லாதவர்கள் | பிரசண்டவிகடன் | 15.12.1961 | உயர்ந்த உள்ளம் |
50 | நெஞ்சத்திரை | பிரசண்டவிகடன் | 01.07.1962 | |
51 | ஆதரவு | பிரசண்டவிகடன் | 15.04.1963 | |
52 | ஊடாதே கனவு, ஊடாதே! | பிரசண்டவிகடன் | 01.02.1964 | |
53 | நான் யார் தெரியுமா? | பிரசண்டவிகடன் | 15.04.1964 | |
54 | நெஞ்சத்தில் நீ (தொடர்கதை) | தேவி் | 1986 | நெஞ்சத்தில் நீ |
55 | பார்வைகள் | தேவி | 25.06.1986 | |
56 | இட்டார்க்கு இட்டப்படி | தேவி் | 23.05.2001 | |
57 | உயிர் நண்பர்கள் | தேவி | 29.08.2001 | |
58 | வனமயில் | தேவி | 30.01.2002 | |
59 | பாடாத குயில் | சுதேசமித்திரன் | 10.12.1961 | |
60 | காதல் களம் | காஞ்சி | 16.05.1965 | |
61 | காதல் ஒரு பூனை | காஞ்சி | 11.04.1971 | |
62 | நடிகையின் மகள் | காஞ்சி | பொங்கல் மலர் 1972 | |
63 | மனக்குரங்கு | காதல் | நவம்பர் 1961 | |
64 | மூன்றாவது துருவம் | காதல் | பிப்ரவரி 1964 | மூன்றாவது துருவம் |
65 | ஏமாற்றாதே,ஏமாறாதே! | காதல் | வசந்த மலர் 1971 | |
66 | ஒரு மனித நாயின் கதை | காதல் | வசந்த மலர் 1975 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
67 | காதல் கதை | போர்வாள் | 05.01.1957 | |
68 | மரண கீதம் | போர்வாள் | 04.01.1958 | |
69 | அழைப்பிதழ் | போர்வாள் | 25.01.1958 | மனக்காற்றாடி |
70 | அவமானம் | மல்லி | அக்-நவ 1971 | |
71 | கனவில் கனிந்த காதல் | மல்லி | ஜனவரி 1982 | |
72 | புகழ் வெறி | அரவிந்தம் | 14.06.1964 | மூன்றாவது துருவம் |
73 | மன்மத மலர் (தொடர்) | அரவிந்தம் | 20.07.1964 | |
74 | கந்தன்கருணை | குண்டூசி | ஜூலை 1975 | |
75 | புல்லுருவி | தினமணி சுடர் | 06.04.1969 | |
76 | பச்சையாக எரியும் சிவப்பு விளக்குகள் | தினமலர் | 14.01.1981 | நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் |
77 | ஓ..இந்த மனிதர்கள் | தினமலர் | 15.12.1992 | |
78 | இரவோடு இரவில் | தினத்தந்தி | 04.09.1966 | |
79 | குழந்தை உள்ளம் | தினத்தந்தி | 09.12.1973 | |
80 | நெஞ்சின் நிறங்கள் (தொடர்) | சினிமித்திரன் | 19.12.1984 | |
81 | கணவன் ஒரு கைக்குழந்தை | அலைஓசை | 14.01.1978 | |
82 | சோதனை | திருவள்ளுவர் | 15.10.1961 | |
83 | இதயம் குளிர்ந்தது | உரிமை வேட்கை | பொங்கல் மலர் 1974 | |
84 | மணிக்கு ஒரு சோதனை | கண்ணன் | 01.05.1969 | |
85 | டூ | வான்மதி | டிசம்பர் 1968 | கனவுக்கண்கள் |
86 | இணைந்த இதயங்கள் | பருவமங்கை | 01.10.1974 | |
87 | காதலில் இது ஒரு ரகமோ | இனிமை | மார்ச் 1983 | |
88 | மாமருந்து மருவத்தூர் சக்தி | கலாவல்லி | தீபாவளி மலர் 1978 |
நாடகங்கள்
வ.எண் | தலைப்பு | இதழ் | ஆண்டு | தொகுப்பின்பெயர் |
---|---|---|---|---|
1 | நிலாச்சோறு | ஆரம்பக்கல்வி | பொங்கல் இதழ் 22.01.1957 | கிள்ளிவளவன் |
2 | ஆளப்பிறந்தவன் அலெக்ஸாண்டர் | ஆரம்பக்கல்வி் | ஜூலை 1960 | அலெக்ஸாண்டர் |
3 | வெண்ணிலா -தொடர் | ஆரம்பக்கல்வி | பிப்ரவரி 1961 | வெண்ணிலா |
4 | சந்தர்ப்பம் | ஆரம்பக்கல்வி் | ஜூன் 1961 | |
5 | பள்ளிக்கூடம் | ஆரம்பக்கல்வி | ஏப்ரல் 1962 | பள்ளிக்கூடம் |
6 | வழிகாட்டி | ஆரம்பக்கல்வி் | ஜூன் 1962 | கைவிளக்கு |
7 | விசாகை | அமுதசுரபி | ஜூலை 1962 | சங்கமித்திரை |
8 | நல்லூர் முல்லை | குயில் | செப்டம்பர் 1962 | நல்லூர் முல்லை |
9 | தகடூர்க்கோட்டை | குயில் | அக்டோபர் 1962 | சங்கமித்திரை |
10 | பாவத்தின் நிழல் | காஞ்சி | பிப்ரவரி 1963 | சங்கமித்திரை |
11 | கைகேயி | காஞ்சி | பிப்ரவரி 1969 | நல்லூர் முல்லை |
12 | பரிசு | கலைமகள் | ஏப்ரல் 1970 | |
13 | பழி தீர்த்த பாவை | கலைமகள் | ஜனவரி 1971 | |
14 | சாக்ரட்டீஸ் | தேம்பாவணி | ஜூன் 1971 | |
15 | கடோத்கசன் | மஞ்சரி | ஜூலை 1978 | |
16 | செங்கரும்பு | உரிமை வேட்கை | ஜூலை 1962 | |
17 | வளையாபதி | தமிழம் | ஜூலை 1962 | வளையாபதி |
வானொலியில் ஒலிபரப்பப் பெற்றநாடகங்கள்
வ.எண் | தலைப்பு | வானொலி நிலையம் | ஆண்டு | நேரம் |
---|---|---|---|---|
1 | உயர்ந்த பரிசு | சென்னை | 06.06.1970 | |
2 | நிழல் | சென்னை | 18.08.1972 | இரவு 8.00 மணி |
3 | விதியின் பிழை (கைகேயி) | சென்னை | 25.01.1973 | இரவு 8.00 மணி |
4 | கதையில் ஒரு நாடகம் | சென்னை | 02.08.1974 | இரவு 8.00 மணி |
5 | விசாகை | சென்னை | 13.05.1976 | மாலை 5.15 மணி |
6 | உயர்ந்த உள்ளம் | சென்னை | 19.06.1976 | மாலை 5.15 தென்கிழக்கு ஆசியஒலிபரப்பு |
7 | ஊருக்கு நல்லது | சென்னை | 31.12.1978 | இரவு 8.00 மணி |
8 | வளையாபதி | திருச்சி | 30.11.1971 | மாலை 6.45 மணி |
9 | கடோத்கசன் | திருச்சி | 29.2.1972 | மாலை 6.45 மணி |
10 | பழிதீர்த்தபாவை | திருச்சி | 11.12.1973 | மாலை 6.45 மணி |
11 | செங்கரும்பு | திருச்சி | 14.01.1975 | மாலை 6.45 மணி |
12 | சாம்ராட் அசோகன் | திருச்சி | 13.08.1975 | மாலை 6.45 மணி |
13 | கடன் பட்டார் நெஞ்சம் | திருச்சி | 21.07.1976 | மாலை 6.45 மணி |
14 | உழைப்பே உயர்வு | திருச்சி | 31.01.1977 | இரவு 7.25 மணி |
15 | பரிசு | புதுவை | 10.03.1979 | மாலை 6.15 மணி |
கல்வெட்டுப்பணிகள்
- 00.01.1977செங்கைமாவட்டவரலாற்றுக்கருத்தரங்கு.இந்தூர்கோட்டம்..... ஆய்வுக்கட்டுரை.
- 23.12.1977- மாநிலவரலாற்றுக்கருத்தரங்கு.கீழ்ச்சேரிக்கோழி... ஆய்வுக்கட்டுரை.
- 12.01.1978- இந்தியாவின்கல்வெட்டுஆராய்ச்சிக்கழகம், நான்காம்பேரவை, சென்னை.கல்வெட்டுகளில்காணப்படும்சுவையானவழக்குகள்... ஆய்வுக்கட்டுரை.
- 16.08.1980- தென்பாண்டிநாட்டுவரலாற்றுக்கருத்தரங்கு, மதுரை.விக்கிரமபாண்டியன்கல்வெட்டு, பெருமுக்கல்... ஆய்வுக்கட்டுரை.
- 25.07.1982- தஞ்சைமாவட்டவரலாற்றுக்கருத்தரங்கு, தஞ்சை.சாரநாடு... ஆய்வுக்கட்டுரை.
- 09.05.1983- இரண்டாம்இராசராசன்விழா, தாராசுரம்.இராசகம்பீரன்மலை... ஆய்வுக்கட்டுரை.
- 08.06.1983- திருக்கோயிலூர், கோடைகாலக்கல்வெட்டுப்பயிற்சிவகுப்பில்சிறப்புச்சொற்பொழிவு.
- 21.12.1983- இராசேந்திரசோழன்விழா, கங்கைகொண்டசோழபுரம்.குந்தவைகட்டியகோயில்கள்... ஆய்வுக்கட்டுரை.
- 04.01.1984- காஞ்சிபுரம், கோடைகாலக்கல்வெட்டுப்பயிற்சிவகுப்பில்சிறப்புச்சொற்பொழிவு.
- ஊட்டியில்நடந்தகல்வெட்டுப்பயிற்சிஅரங்கில்‘கல்வெட்டுசெய்தியைக்கூறும்சங்ககாலப்பாடல்கள்’சொற்பொழிவு.
- 30.7.1976- ஒரத்தியில் நந்திவர்மன், கன்னரதேவன் (கன்னட) கல்வெட்டுகள்.... அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு. ‘தினமணி
- 05.12.1976- அச்சிறுபாக்கம்... பார்வதிசிலை.
- 00.00.1977- விஜயநகரகாலச்செப்பேடு...
- 13.11.1977- நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி. ‘தினமணி சுடர் ’
- 03.09.1978- மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்கள் (வீணாதர்... பார்வதி) கண்டறிந்து தொல்பொருள்துறைக்குச் செய்தி தந்தது. ‘தினமணி சுடர் ’
- 00.00.1978- மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசுகண்டு தொல்பொருள்துறைக்கு அளித்தது.
- 02.03.1979- வள்ளுவர் காலத்தில் எழுதிய தமிழ் மற்றும் திருக்குறள். ‘தினமணி கதிர்’
- 24.05.1981- தெள்ளாற்றில் 27 புதியகல்வெட்டுகள் படியெடுப்பு.
- 03.01.1982- தெள்ளாறு... ஜேக்ஷ்டாதேவி அரியசிலை கண்டுபிடிப்பு. . ‘தினமணி சுடர் ’
- 27.03.1982- திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு. ‘தினமணி
- 08.05.1982- 1000 வயதான அபூர்வ நடுகல். ‘தினமலர்’
- 05.05.1983- திண்டிவனம் வட்டம்,கீழ்ச்சேவூர் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.
- 06.05.1983- இரண்டு தெலுங்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
- 05.10.1984- தெள்ளாறு... கன்னரதேவன் கல்வெட்டு.
- 10.12.1984- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூரில் 8 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
- 31.08.1985- ஒரத்தி 6 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.
- 14.01.1986- விழுப்புரம் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு. ‘தினமணி
- 16.05.1987- தென்ஆர்க்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவந்தூரில் 3 கல்வெட்டுகள்.
- 08.08.1987- பண்ருட்டி அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு . ‘தினமலர்’
- 21.11.1987- தென்ஆர்க்காடு மாவட்டம், வானூர் வட்டம், தென்சிறுவள்ளூரில் பராந்தகன், முதலாம் இராசராசன், கோப்பெருஞ்சிங்கன் காலக்கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும்.
- 28.12.1987- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்வட்டம், புத்திரன்கோட்டையில் 28 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும். ‘தினமணி
- 08.05.1989- கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு. ‘தினமணி’
- 31.05.1989- 3000 ஆண்டுகளுக்கு முந்திய குகை சித்திரங்கள் கண்டுபிடிப்பு. தேவி’
- 19.01.1990- மதுராந்தகம் வட்டம், கடைமலைப்புத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய 1.5 மீட்டர் உயரமுள்ள இயக்கி, சாத்தனார் சிலைகள். மின்னல்சித்தாமூரில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சாத்தனார், கொற்றவை சிலைகள் கண்டறிந்தது. ‘தினமணி
- 05.07.1997- 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை. ‘தினமணி
- 26.08.1997- பொலம்பாக்கத்தில் புதிய கல்வெட்டுகள். ‘தினமலர்’
- 02.09.1997- காசி பயண கோட்டுருவச் சிற்பம். ‘தினமணி
- 20.04.1998- செய்யாறு வட்டம், கூழம்பந்தல் 1500 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலுள்ள சமணதீர்த்தங்கரர் சிலை.
- 22.04.1998- செய்யாறு வட்டம், கூழம்பந்தலில் தெலுங்குச் சோழனான விஜயகண்ட கோபாலனின் (கி.பி.1270) கல்வெட்டு. ‘தினமலர்’
- 31.03.1999- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார், கொற்றவைசிலைகள். ‘தினமலர்’
- 14.05.1999- மதுராந்தகம் வட்டம், கொங்கரைகளத்தூரில் அரிய செய்திகளைக் கொண்ட இரண்டு பல்லவர்காலக் கல்வெட்டுகள். ‘தினமலர்’
- 03.04.2000- காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஈசூரில் 1300ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருமால் சிற்பம். நெற்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சமணதீர்த்தங்கரர்.வெண்மாலகரத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்திய திருமால், சீதேவி,பூதேவிசிலைகள் (சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை). ‘தினமலர்’
- 00.00.2001- கொங்கரையில் இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு.
- 24.01.2001- 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மதுராந்தகம் வட்டத்தில் கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
- 12.08.2001- காஞ்சிபுரம் அருகே சிறுதாமூரில் சோழர் கால கல்வெட்டு சிற்பம். ‘தினமலர்’
- 09.11.2002- ஆலந்தூரில் மண்ணுக்கடியில் இன்னொரு கோயில்கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
கல்விப் பணிகள்
தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், மைசூர் நடுவண் மொழி நிறுவனமும் இணைந்து நடத்திய கல்வி ஆராய்ச்சிப் பணிமனையில் கலந்து கொண்டு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடநூல் வழிகாட்டிகள் எழுதியுள்ளார்.பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சியும் அளித்துள்ளார்.
1989-1990 முதல் பள்ளிகளில் வைக்கப்பெற்ற 4 மற்றும் 9-ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் எழுதிய ‘அத்திப்பூ’ என்னும் சிறுகதையினை 1978-ல் பதினோராம் வகுப்புத் தமிழ்த் துணைப் பாடநூலிலும், ‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் ஓரங்க நாடகத்தை பனிரெண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழிலும், 1989-1990-ல் ‘நடுகல் கண்ட கீழ்சேரிக் கோழி’ என்னும் ஆய்வுக் கட்டுரையை பதினோராம் வகுப்புத் தமிழ்த் துணைப் பாடநூலிலும் தமிழக அரசு பாடமாக வைத்தது. இவரது ஆசிரியர் பணி 38 ஆண்டுகள் தொடர்ந்தது.1992-ஆம் ஆண்டு (அச்சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி) பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பரிசுகளும், பட்டங்களும்
பரிசுகள்
- 16-01-1984 ஞான்று'சங்கமித்திரை' நாடக நூலுக்கு தமிழக அரசு சார்பாக பரிசும், பாராட்டு இதழும், மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வழங்கினார்.
- 16-01-1985 ஞான்று 'வரலாற்றுக் கருவூலம்'கல்வெட்டு ஆய்வு நூலுக்கு தமிழக அரசு சார்பாக பரிசும், பாராட்டு இதழும், மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வழங்கினார்.
- ‘மாநில நல்லாசிரியர் விருது’ 05-09-1988 தமிழக அரசுவழங்கியது.
- ‘இரகசியம்’ நாடகத்திற்கு 20-01-1993 பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசு வழங்கியது.
- அந்தமான் தமிழர் சங்கத்தில் 03-12-1993 பாராட்டு விழா நடைபெற்றது.
- 'பல்கலைச் செம்மல்’ 09-03-1985 சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழங்கியது.
- ‘டாக்டர்’ பட்டம் 17-05-1985 நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் வழங்கியது.
- 'திருக்குறள் நெறித் தோன்றல்’ 18-08-1985 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
- 'நாடக மாமணி' 03-08-1985 திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை விழாவில் வழங்கப்பட்டது.
- 'பாரதி தமிழ்ப்பணிச் செல்வர்' 1990இல் ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
- 'இலக்கியச் சித்தர்' 08-01-1995 இல் பண்ருட்டியில் நடந்த எழுத்தாளர் சங்க விழாவில் வழங்கப்பட்டது.
- 'இலக்கியச் சிற்பி' 01-01-1996 இல் புதுவையில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது.
“இவர் நாடகம் ஆக்கும் துறையிலே நல்ல ஆற்றல் வாய்ந்தவராகக் காணப்படுகிறார். இவரின் நாடகமுயற்சிகளை வரவேற்பதன் மூலம், நல்ல மேடை நாடகங்களும், இவரிடமிருந்து தமிழர்க்குக் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.”-அவ்வை டி.கே. சண்முகம்
“சுமார் 500 நூல்களுக்கு மேல் மதிப்புரை எழுதியுள்ளார்.கவிதை நூல்களுக்குள் கவிதை நயத்தோடு மதிப்புரைகள் எழுதினார். இலக்கிய நூல்களுக்கு இலக்கிய நோக்கோடு வரைந்தார். ஆய்வு நூல்களுக்கு மிகச் சிறந்த ஆராய்ச்சி அணுகுமுறையோடு அலசினார்.இவர் எழுதியுள்ள நூல் மதிப்புரைகள் நடு நிலைமையுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.”-‘தினமலர்’ இரா. கிருஷ்ணமூர்த்தி
“தாமரைக்கண்ணனின் ‘கம்பாஸ்பி’ என்கிற காவியம் இதோ என் கண்களைக் கெளரவப் படுத்துகிறது.உயிரோவியமான காதலைக் கனிந்த தமிழில் காவியமாக்கி இருக்கிறார். தமிழ்நாடக உலகத்தின் புலர் காலைப் பொழுது! சீர்திருத்த சிறுகதையாளராய், நாட்டுக்கு நல்லதை உணர்த்தும் நாவல் ஆசிரியராய், குதூகலத்தோடு கொஞ்சும் குழந்தை எழுத்தாளராய், நன்மணி நாடக ஆசிரியராய், கல்வெட்டில் கால்ஊன்றி கனவில் தலை நிமிரும் அறிஞர்.”- வலம்புரி ஜான்
“இவரது புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும்.அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு இவரை பாராட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல..... அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று இவர் ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும்.”-டாக்டர் இரா. நாகசாமி
“வீர கேரளன் காசு, ஒரத்தியில் கன்னரதேவனுடைய தமிழ் - கன்னடக் கல்வெட்டுகள், முதலாம் இராசராசன் காலத்திய செப்புத் திருமேனிகள் போன்று பலவற்றைக் கண்டுபிடித்துத் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறைக்குத் தெரிவித்துத் தமிழக வரலாற்றுக்குத் துணைபுரிந்துள்ளார். வரலாற்றுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.”-நடன. காசிநாதன்
“புலவராயிருந்தாலும் புரியும் தமிழில் எழுதுவதால் இவர் டாக்டர் மு.வரதராசனாருக்கு நிகராக விளங்குகிறார்.கதை சொல்லும் அவருக்கு இவர் சளைக்கவில்லை.இவர் எந்தச் சாராரையும் சேராமலும் சாடாமலும் எழுதுவது போற்றத்தக்கது.”-விந்தன்
“திருக்கோயில்களின் வரலாற்றுண்மைகளைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறப்புறப் பதிவு செய்துள்ள புலவர் தாமரைக்கண்ணன் அவர்களின் பணி, பாராட்டுதற்குரியதாகும்.இந்நூலில் அமைந்துள்ள சொல்லாய்வுகள் சுகந்தருகின்றன.வரலாற்று உண்மைகள் வியப்புக்கே விருந்தளிக்கின்றன. இவரது படைப்புத் திறனுடன், கல்வெட்டுக் கல்வி, வரலாற்றாய்வு, சொல்லாய்வு போன்ற பல்துறைத் திறனும் சிறப்புற வெளிப்பட்டு விளங்குகிறது .”-டாக்டர் நா.ஜெயப்பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக